ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பணமோசடி வழக்கு..!! நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு..!!
திருப்பூரில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை நீதிமன்றம் தீர்ப்பு ..
திருப்பூரை மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோவிந்தாபுரம் பகுதி சேர்ந்தவர் தெய்வராஜ் விவசாயியான இவர் தனது தந்தையின் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயரில் மாற்றுவதற்காக (பட்டா மாறுதலுக்காக) கடந்த ஜனவரி 6ம் தேதி 2009ம் ஆண்டு கோவிந்தாபுரம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த திருமலைச்சாமியை நாடியுள்ளார்.
அப்போது அவர் ஐந்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே பட்டா மாறுதல் செய்யப்படும் என தெரிவித்த நிலையில் இது குறித்து தெய்வராஜ் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் அவர்கள் அறிவுறுத்தலின்படி ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை தெய்வராஜிடம் கொடுத்து.,
தெய்வராஜ் கிராம நிர்வாக அலுவலரான திருமலைச்சாமி இடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் திருமலைச்சாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இது தொடர்பாக வழக்கு விசாரணையானது திருப்பூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி செல்லதுரை திருமலைச்சாமிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
தற்போது ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான திருமலைசாமிக்கு 69 வயதான நிலையில்., திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு மூன்று ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் கிராம நிர்வாக அலுவலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது