ரேஷன் கடைகளில் யூபிஐ பேமெண்ட் வசதி கொண்டு வரப்படும் என கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
மக்களிடையே ஜிபே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலமாக பெட்டிக்கடை முதல் ஸ்டார் ஓட்டல்கள் வரை பணம் செலுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை நன்கு அறிந்த தமிழ்நாடு அரசு தற்போது யுபிஐ பயனர்களை மகிழ்விக்கும் விதமாக அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மே மாதம் 10ம் தேதிக்குள் ஜிபே, போன்பே, பேடிஎம் ஆகியவற்றை பயன்படுத்தும் வகையில் யுபிஐ பேமெண்ட் வசதி ஏற்படுத்தப்படும் என கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார்.
மேலும் கூட்டுறவு சங்கங்களில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை பாயும் என்றும் சண்முக சுந்தரம் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.