ரேஷன் கடையில் இன்று முதல் தக்காளி விற்பனை..!!
தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் இன்று முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்திருந்தார். அதன் பெயரில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துரையின் கீழ் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி விலை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை குறையாத நிலையில்.., விலை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த பெரிய கருப்பன்.
சென்னையில் 82 நியாயவிலை கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது அதன் படி, தக்காளி கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. தேவைக்கு ஏற்ப்ப தக்காளி கொள்முதல் செய்யப்படும் என்றும், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.
Discussion about this post