ஈரோட்டில் கல்வி உதவித்தொகை வழங்கள்…!! மாணவர்கள் நெகிழ்ச்சி…!!
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழங்கிய 28 பேருக்கு 10 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை காசோலை வழங்கப்பட்டது.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் வழங்கிய காசோலையை பள்ளி மாணவ மாணவியர்களுக்கும், கல்லூரி மாணவ மாணவியர்களுக்கும் மாவட்ட தலைவர் டாக்டர் மக்கள் ஜி ராஜன் இன்று வழங்கினார்.
பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் 40 ஆயிரமும், கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 25000, பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 25000, மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு சுமார் ஒரு லட்சமும், பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 15,000 மற்றும் 10 ஆயிரம் மொத்தமாக சுமார் 9,40,000 ரூபாய் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வழங்கப்பட்டு அதன் காசோலையை இன்று ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து விண்ணப்பித்த 28 மாணவ மாணவியர்களுக்கு மாவட்டத் தலைவர் மக்கள் ஜி ராஜன் வழங்கினார். இந்த காசோலையை வழங்கிய மாநில தலைவர் அவர்களுக்கு இன்று நடைபெற்ற கூட்டத்தில் நன்றி செலுத்தப்பட்டது.
மேலும் தொடர்ந்துதமிழக அரசு பேரிடர் காலத்தில் தற்பொழுது ஏற்பாடு செய்திருக்கக்கூடிய பணிகள் மிகச் சிறப்பாகவும் பொது மக்களுக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தும் வகையில் இல்லாமல் இருந்தது பாராட்டுக்குரியது. தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களையும், துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களையும், அரசுத்துறை அதிகாரிகளையும் சுகாதாரத் துறை அதிகாரிகளையும் குறிப்பாக தூய்மை பணியாளர்களையும் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பாராட்டுகின்றோம். இந்தக் கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல்.பி.பாலசுப்ரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
மேலும் வட்டார தலைவர்கள் கொடுமுடி கிழக்கு கோபாலகிருஷ்ணன் கொடுமுடி மேற்கு டிஸ்கோ முருகேஷ் சென்னிமலை வடக்கு ஓசி சண்முகம் மொடக்குறிச்சி வடக்கு ரவி மாவட்ட துணை தலைவர் தில்லை சிவக்குமார் மாவட்ட பொது செயலாளர் சக்திவேல் மாவட்ட நிர்வாகிகள் குமார் பாபு சந்திரமோகன் மாவட்ட மாவட்ட டிசிடியு தலைவர் சிவகிரி செந்தில் அஷ்ரப் அலி உள்ளிட்ட காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..