நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக தனியார் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தில் பணிப்புரியும் பணியாளர்கள் அனைவருக்கும் ஆகஸ்ட் 10ஆம் தேதி விடுமுறை அளித்துள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வருகின்ற வியாழக்கிழமை ஆகஸ்ட் 10ம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் பெரிய அளவில் நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மற்றும் பெங்களூருவில் 8 கிளைகளைக் கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய ஜெயிலர் படம் வெளியாவதை தொடர்ந்து ஒரு ஆச்சரியமான முடிவை வெளியிட்டுள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாக உள்ள நிலையில் எங்களது HR டிபார்ட்மெண்டுக்கு விடுப்பு விண்ணப்பங்கள் குவிவதை தடுக்க ஆகஸ்ட் 10ம் தேதி எங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும் ,மேலும் எங்கள் பணியாளர்களின் சிரமத்தை குறைக்க அவர்கள் அனைவருக்கும் ஜெயிலர் படத்திற்கான இலவச டிக்கெட்களையும் நாங்கள் வழங்குகின்றோம் என்றும் அறிவித்துள்ளது…இது அந்த நிறுவனத்தின் சென்னை, பெங்களூர், திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் மற்றும் அழகப்பன் நகரில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது…இதனை பார்த்த ரசிகர்கள் அடடா இதனால் தான் இவர் சூப்பர் ஸ்டார் என சொல்லி வருகின்றனர்..