குஷ்பூவிற்கு எதிராக திரும்பிய பொன்னேரி மக்கள்..!!
பாஜாகாவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு உழைக்கும் மக்கள் டாஸ்மாக்கில் செலவழிக்கும் பணத்தை சேமிக்க நமது பெண்களுக்கு உதவ வேண்டும் என்றும், தமிழக அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் பணத்தை விட குடிகாரர்களால் பெண்கள் படும் வேதனையின் அளவு அதிகம் என பேசி இருந்தார்.
இதனால் குஷ்பூவிற்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் எதிர்ப்புகள் கிளம்பியது. அதன் தொடர்ச்சியாக இன்று பொன்னேரி நகராட்சியில் குஷ்பூவின் படத்தை துடைப்பத்தால் அடித்தும், உருவ பொம்மையை எரித்தும், அவரை கைது செய்ய வேண்டுமென கூறி கண்டன கோஷங்களை எழுப்பி பொன்னேரி நகரமன்றதலைவர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் திமுக மாவட்ட மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..