பொள்ளாச்சி பலூன் திருவிழா..!! சுற்றுலா பயணிகளுக்கான ஏற்பாடு…?
பொள்ளாச்சியில் 10வது சர்வதேச பலூன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
தமிழகத்தின் தென்னைநகரம் என்று அழைக்கப்படும் பொள்ளாச்சி பகுதியின் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது வால்பாறை ஆழியார் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் உள்ளிட்ட தென்னை மரங்கள் விவசாயம் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருப்பதால் பெரும்பாலான திரைப்படங்களின் படப்பிடிப்பு இங்கு நடைபெற்று வருவது வழக்கம் தொடர்ந்து சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் ஆண்டு தோறும் சர்வதேச பலூன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி பத்தாம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள ஆச்சி பட்டி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரேசில் , பெல்ஜியம், ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட வெப்பக்காற்று பலூன்கள் கொண்டுவரப்பட்டு விதவிதமான வண்ணங்களில் வெப்பக்காற்று நிரப்பப்பட்ட சுற்றுலா பயணிகளை பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பலூன்களில் பயணித்து இயற்கை எழில் கொஞ்சும் பொள்ளாச்சியில் ரம்யமான அழகை கண்டு ரசித்தனர். இன்று தொடங்கும் இந்த பலூன் திருவிழா 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..