இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், தந்தை பெரியாரின் குடும்ப வாரிசுகளில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மூத்த மகன் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்தவுடன் அளவுகடந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தாக தெரிவித்துள்ளார்
காங்கிரஸ் கட்சியிலும் தீவிரமாகப் பணியாற்றியதோடு, அக்கட்சியின் தொழில்நுட்பப் பிரிவிலும் செயலாற்றி, காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்காக தொகுதியில் அரிய சேவைகளைச் செய்து வந்ததாகவும் வைகோ தெரிவித்துள்ளார்
வாழ வேண்டிய 46 வயதிலேயே ஈவெரா இயற்கை எய்தியது அந்தக் குடும்பத்தினரால் மட்டுமல்ல, யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது எனவும் வைகோ வேதனையுடன் தெரிவித்துள்ளார்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு தன்னுடைய துயரத்தையும், இரங்கலையும் தெரிவித்தாகவும் தாங்க முடியாத இந்தத் துக்கத்தை அவரோடும், அவரது குடும்பத்தினரோடும், காங்கிரஸ் கட்சியினரோடும் பகிர்ந்துகொண்டு, தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் வைகோ தமது இரங்கல் குறிப்பிட்டுள்ளார்