இரும்பு வேலியை திருட முயற்ற நபர்கள்.. உரிமையாளரை கண்டதும் செய்த செயல்..!
ஜெயங்கொண்டம் அருகே வயலில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியை திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மனகெதியில் உள்ள சுங்கச்சாவடியில் செந்தில்குமார் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணி உதவி ஆய்வாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மனகெதி கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான வயலில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியை மர்மநபர்கள் அகற்றி சுருட்டி கொண்டிருந்தனர்.
இதனை கண்ட செந்தில்குமார் என்ன செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனையடுத்து மூவரும் இரும்புவேலியை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து செந்தில்குமார் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மனகெதியை சேர்ந்த கனகராஜ் மணிகண்டன் கார்த்திகேயன் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-பவானி கார்த்திக்