2014ல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மதுரையை களமாக கொண்டு எடுக்கப்பட்ட ஜிகர்தண்டா திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா என நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். இந்த படத்துக்காக 2014ல் பாபி சிம்ஹா தேசிய விருது பெற்றார். தற்போது 8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது.
ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஜிகர்தண்டா பாகம் ஒன்று திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ஜிகர்தண்டா பாகம் 2 விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. ஜிகர்தண்டா 2வில் இயக்குநர் எஸ்ஜேசூர்யா மற்றும் லாரன்ஸ் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கான இசை சந்தோஷ் நாராயணன். இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி ஜிகர்தண்டா 2 திரைப்படம் நவம்பர் 12ம் தேதி தீபாவளி தினத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என சின்ன டீஸருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post