பஹால்காம் தாக்குதலையடுத்து, இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானின் பல நகரங்களை தாக்கின. முக்கியமாக பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்லாமாபாத்தில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில்தான் ராவர்பிண்டியின் நுர்கான் விமானப்படை தளம் உள்ளது.
இங்குதான், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் பயணிக்கும் விவிஐபி விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, கடந்த 10ம் தேதி இந்திய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல் நடத்திய போது, அங்குதான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தாக்குதலில் இருந்து இந்த விமானங்கள் தப்பி விட்டது.
செயற்கை கோள் புகைப்படங்களை எடுக்கும் சேட்லாஜிக் நிறுவனம் எடுத்த புகைப்படங்களில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்தியா டுடெவும் புகைப்படத்துடன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு விவிஐபிக்ளுக்காக Gulfstream G450 என்ற ரக விமானங்களை பயன்படுத்தி வருகிறது.
இஸ்லாமாபாத்துக்கு மிக நெருக்கமாக இருக்கும் இந்த விமானப்படை தளத்தில்தான் இவை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வழக்கமானது. மே 19 தேதி இரு Gulfstream G450 ரக விமானங்கள் இந்த விமானப்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மற்றொன்று லாகூர் விமானப்படை தளத்தில் இருந்துள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தான் நீர் வளத்துறை அமைச்சகம் இந்திய நீர்பாசத்துறை அமைச்சகத்துக்கு சிந்து நதி நீரை நிறுத்துவது குறித்து மறுபரீசிலனை செய்ய வேண்டுமென கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.