இ.பி.எஸ் தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை தழுவியுள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ் ஒதுக்கப்பட்ட நிலையில் தனது ஆதரவாளர்களுடன் தனித்தே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்திய தேர்தல் ஆணையமும் அதிமுகவின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் ஓ.பி.எஸ்-க்கு அதிமுகவில் இடம் இல்லை என்பது தெரிய வருகிறது. எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் இ.பி.எஸ் தலைமையிலான அதிமுக அணி பாஜகவுடன் கூட்டணி வைக்க உள்ளது.
இதுத்தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்,
இபிஎஸ் தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை தழுவியுள்ளது. மேலும் “வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம், தேர்தலுக்கு தயாராகும் வகையில், வரும் செப்டம்பர் 3ம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன்” என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.