நட்பாக இருந்தால் மட்டுமே இந்த பிரச்சனை முடிவிற்கு வரும்..!! நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!!
இரு மாநிலங்களும் நட்புறவுடன் நடந்துகொள்வது அவசியம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், கர்நாடகாவில் இருந்து 12 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தவுள்ளதாக தெரிவித்தார்.
ஆற்றின் கடைமடைப் பகுதிக்கே முன்னுரிமை தரவேண்டும் என்ற விதியை கர்நாடகா பின்பற்ற மறுப்பதாக தெரிவித்த அவர், காவிரி நீர் திறப்பு தொடர்பான உத்தரவுகள் எதையும் கர்நாடகா பின்பற்றுவதில்லை என்றும், உச்சநீதிமன்ற உத்தரவை கூட கர்நாடகா மதிப்பதில்லை எனவும் சாடினார்.
கர்நாடக மாநில அணைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருந்தும் அதை திறக்க மறுப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துடன் நட்புறவுடன் நடந்து கொள்வது அவசியம் என்றும், அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணம் இருக்க வேண்டும். கூறினார்.