ஆன்லைன் மூலம் மது விற்பனை..! டாஸ்மாக் கொடுத்த விளக்கம்..!
ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டம் இல்லை., இதுபோன்ற எந்த புது முயற்சியிலும் இறங்கத் திட்டம் இல்லை டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசு :
தமிழகத்தில் பீர் ஒயின் மற்றும் மண மூட்டப்பட்ட மது வகைகள் போன்றவற்றை குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மது வகைகளை ஸ்விக்கி, ஜொமேட்டோ, பிக் பேஸ்கெட் போன்ற ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக சில செய்திகள் வெளியானது.
மேலும் உரிய சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மது உற்பத்தியாளர்கள் போன்றவருடன் கலந்தாய்வு செய்வதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த செய்திகளை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு :
அதற்கு டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மதுபானங்களை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்ய, உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி இருப்பதாக வெளியான தகவலுக்கு பலர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று மதுவை விற்கும் திட்டமில்லை. இதுபோன்ற எந்த புது முயற்சியிலும் டாஸ்மாக் நிர்வாகம் இறங்கத் திட்டம் இல்லை எனவும் கூறியுள்ளது.
மூடப்பட்ட டாஸ்மாக் :
மேலும் மதுபானக்கடைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 500 கடைகள் வரை மூடப்பட்டுள்ளது. மேலும் மதுபானக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டு வருகிறது. மதுபானக்கடைகளுக்கு பதிலாக கள்ளுக்கடைகளை திறக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ