உளுந்தூர்பேட்டை ஆடு சந்தையில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஒரே மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை ஆடுகளை வாங்க அதிகாலையில் குவிந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் ஆடு சந்தை நடைபெறுவது வழக்கம். பண்டிகை காலங்களில் ஆடுகள் விற்பனை அதிகளவில் இருக்கும் என்பதால் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் வந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் வருகின்ற சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை வருவதை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஆடு சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தது. இதனை ஏராளமான வியாபாரிகள் மினி டெம்போ, லாரி உள்ளிட்ட வாகனங்களில் வந்து வாங்கிச் சென்றனர்.
கடந்த வார சந்தையில் விற்ற ஆடுகளின் விலையை விட இந்த வாரம் கூடுதலாக ரூபாய் 500 முதல் 1000 வரையில் ஆடுகளின் விலை இருந்ததால் ரம்ஜான் பண்டிகை வருவதை முன்னிட்டு வேறு வழியில்லாமல் கூடுதல் விலை கொடுத்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். அதிகாலை முதல் நடைபெற்ற இந்த ஆட்டு சந்தையின் காரணமாக உளுந்தூர்பேட்டை சேலம் ரோட்டில் போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டது. இரண்டு மணி நேரத்தில் சுமார் ஒரு கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனையாகி இருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்