“ஐயயோ.. என் பொண்டாட்டி தூக்கு மாட்டிக்கிட்டா” – கதறி நாடகமாடிய கணவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு வரவைத்த போலீஸ்..
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள நரியனேரி பகுதியை சேர்ந்தவர் ராமன். 30 வயதாகும் இவர் சென்னையில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி சூர்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் அடிக்கடி சண்டை போட்டு கொள்வார்களாம்.
அதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன்பு பணி முடிந்து வழக்கம் வீடு திரும்பியுள்ளார் ராமன் சூர்யாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் இருவருக்கு சண்டை முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ராமன் மனைவி சூர்யாவின் கழுத்தை நெறித்துள்ளார்.
இதனால் மயக்கமடைந்து சூர்யா கீழே விழுந்துள்ளார். இதனை கண்டு செய்வதறியாமல் நின்ற ராமன் அக்கம் பக்கத்தினரிடம் ஐயயோ மனைவி சூர்யா தூக்கு போட்டுக் கொண்டதாக கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சூர்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து ராமனிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராமன் சூர்யாவை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியது அம்பலமாகின. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
-பவானி கார்த்திக்