எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடும் எந்த ஒரு செயல் குழுவும் பொதுக்குழுவும் செல்லாது என்றும், இதுவரை தனது பெயர் தான் தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என உள்ளதாகவும் கூறி அதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், வருகிற 24-ஆம் தேதி திருச்சியில் அதிமுக முப்பெரும் மாநாடு நடைபெற இருப்பதாகவும் இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஜெயலலிதாவின் வெங்கல திரு உருவ வைக்கப்பட தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறக்கூடிய எந்த ஒரு பொது குழு செயற்குழுவின் செல்லாது எனத் தெரிவித்த அவர், தற்போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் ஒரு பொதுச் செயலாளர் போல் ஒரு மாயை ஏற்பட்டு இருப்பதாகவும் இந்த மாயை மக்கள் மன்றத்தை சென்றடையும் போது உடையும் என்றார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு பிரகாசமாக இருந்த போதிலும் அங்கு கட்சி படுதோல்வி அடைந்ததாகவும் குற்றம் சாட்டினார். கட்சியின் நலன் கருதியே அனைத்து விவகாரங்களிலும் விட்டுக் கொடுத்து தான் சென்றதாகவும் தலைமைக்காக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தன்னை பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கக்கூடிய பொறுப்பு கட்சி தொண்டருக்கு தான் உள்ளது எனவும் எம்ஜிஆர் போல் எடப்பாடி பழனிச்சாமி அணிந்த வேடத்தை பார்த்த தமிழக மக்கள் வேதனை அடைந்திருப்பதாக கூறினார்.
தான் கட்சியின் சட்ட திட்ட விதிப்படியே சட்ட ரீதியாக போராடி வருவதாகவும் எதிர்காலத்தில் தங்கள் தரப்புக்கு உரிய நியாயம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இதுவரை மேற்கொண்ட சட்ட போராட்டத்தில் உரிய நியாயம் தனக்கு கிடைக்கப்படவில்லை எனவும் தெரிவித்த ஓபிஎஸ், அதிமுகவில் பிளவு ஏற்பட கூடாது என்பதற்காக எங்களுடைய வேட்பாளரை விலகச் சொன்றேன் எனக்கூறினார். தேர்தல் ஆணையத்தில் தான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளராக தற்போது வரை இருப்பதாகவும் அது மாற்றப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பணம் பலம்,படை பலம் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தியும் தேர்தலில் மக்கள் பதில் கொடுத்து விட்டார்கள் . எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடும் எந்த செயற்குழுவாக இருந்தாலும்,பொதுகுழுவாக இருந்தாலும் அது சட்டவிரோதமானது.
பிரதமர் நாளை சென்னை வருகிறார் பார்ப்பதற்கு வாய்ப்பு இருந்தால் சந்திப்பேன், இதுவரை பிரதமரை பார்ப்பதற்கு அழைப்பு வரவில்லை,மக்களும் தொண்டர்களும் சேர்ந்து எடுக்க முடிவு தான் நிலையானது என்றும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தனது சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு போட்டியிட இருப்பதாகவும் தெரிவித்தார்.