இனி ஒரே கார்டில் 3 டிராவல்..!! அட இது சூப்பரா இருக்கே..!!
சென்னையில் தற்போது கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது.., பொதுமக்கள் பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ என மாறி மாறி பயணித்து வருகின்றனர்.., பயணிகளின் சிரமத்தை குறைக்கவும், மக்களின் நேரத்தை குறைக்கவும் அரசு ஒரு சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளது..
சென்னையில் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரி இருந்தது.
இந்த நிலையில் ஜூன் இரண்டாம் வாரம் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி மூன்று போக்குவரத்திலும் பயணிக்க வசதியாக பிரத்யேக கார்டு ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த கார்டில் ரீசார்ஜ் செய்து மக்கள் பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..