எத்தனை புதிய கட்சி வந்தாலும்..! திமுகவிற்கு இணை ஏதும் இல்லை..!! அமைச்சர் மா.சு பேச்சு..!!
எத்தனை கட்சி புதியதாக வந்தாலும், ஏற்கனவே இருந்த கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருக்கட்டும், தேசிய கட்சியாக இருக்கட்டும் திமுகவிற்கு இணையாக உருவாக வாய்ப்பே இல்லை என சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு.
சென்னை சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளரும், சென்னை மாநகராட்சி 15-வது மண்டலக் குழு தலைவருமான வி.இ.மதியழகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்திய அளவில் ஆட்சியை நடத்துவதில் நம்பர் ஒன் முதலமைச்சராக தளபதி திகழ்ந்து வருகிறார் என புகழாரம் சூட்டினார். திமுக வரலாற்றில் 106 செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தியது சென்னை தெற்கு மாவட்டம் தான் பெருமிதம் கொண்டார்.
எத்தனை கட்சி புதியதாக வந்தாலும், ஏற்கனவே இருந்த கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருக்கட்டும், தேசிய கட்சியாக இருக்கட்டும் திமுகவிற்கு இணையாக உருவாக வாய்ப்பே இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு.
தமிழகத்தில் அதிக கழக கொடிகளை ஏற்றிய மாவட்டம் தென்சென்னை மாவட்டம் என்ற வகையில் அனைவரும் வீடுகளில் இருவண்ண கழக கொடியை ஏற்ற வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சூரியன் சின்னத்திற்கு அதிகளவு வாக்கு பெற்றுத் தந்து தமிழச்சி தங்கபாண்டியனை வெற்றிபெற செய்த முதல் பரிசாக 183-வது வட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 194-வது வட்டத்திற்கு 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 192-வது வார்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் என மூன்று திமுக வட்டச் செயலாளர்களுக்கு பரிசுத் தொகையை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏ எஸ் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் வழங்கினார்கள்.
இதில் மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.