ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக நீடா அம்பானி தேர்வு..! “இந்தியா ஹவுஸ் திட்டம்..” நீடா அம்பானி உறுதி..!
விளையாட்டு உலகின் திருவிழா என்று சொல்லப்படும் 33-ஆவது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகரான “பாரிசில்” நாளை தொடங்க உள்ளது. நாளை தொடங்கும் இந்த போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும்.. இந்த போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீர மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
அதற்காக அங்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக செயின் நதிக்கரையில் 3 லட்சம் பேர் முன்னிலையில் 162 படகுகள் மூலம் வீரர்கள் மற்றும் நடன கலைஞர்களை கொண்டு செய்ன் நதியில் 4 மணி நேரம் தொடக்க விழா நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக நீடா அம்பானி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒலிம்பிக் கமிட்டியின் (international Olympic committee) 142வது கூட்டம் நடைபெற்று முடிந்த பின் 100 சதவீத வாக்குகளுடன், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக நீடா அம்பானி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நீடா அம்பாணி எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது “சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக நான் தேர்தெடுக்கபட்டதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.
Media Release – Mrs. Nita M. Ambani Re-Elected Unanimously as IOC Member
Paris 24th July 2024: Ahead of the opening ceremony of the Paris 2024 Olympic Games this weekend, the International Olympic Committee (IOC) has today announced that Mrs Nita M. Ambani, leading Indian… pic.twitter.com/rENdUVRWFE
— Reliance Industries Limited (@RIL_Updates) July 24, 2024
ஒலிம்பிக் கமிட்டியில் உள்ள உறுப்பினர்கள், என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்கு முதலில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உலகளவிய விளையாட்டு அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிக்கவும், ஒலிம்பிக் இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேம்படுத்துவேன்” என தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக நான் முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதன் மூலம் “லிப்பிக் கமிட்டியை சேர்ந்த முதல் இந்திய பெண் என்ற சாதனை” கிடைத்தது.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ஒவ்வொரு நாட்டின் வீரர்களும் தங்குவதற்கு இல்லம் ஒன்றை அமைத்து.
அதில் வீரர்கள் தற்காலிக ஓய்வு எடுப்பதற்கான அறை உட்பட பல்வேறு வசதிகளை கொண்ட இல்லம் கட்டித்தரப்படும். கடந்த 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் 35க்கும் அதிகமான இல்லங்கள் ஒலிம்பிக் வளாகத்தில் அமைத்தது.
அதன் பின் இந்த ஆண்டு இந்தியா தனது இல்லத்தை (இந்தியா ஹவுஸ்) பாரீஸ் ஒலிம்பிக் வளாகத்தில் அமைக்கபடவுள்ளது. அதனை இந்தியா ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து நீடா அம்பானியின் ரிலையன்ஸ் அறக்கட்டளை கட்டி தரும் என அவர் கூறியிருந்தார்.
– லோகேஸ்வரி.வெ