நெல்லை மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடுதாாஐ மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களைச் சார்ந்த மீனவர்கள் சுமார் 10,000 க்கும் மேற்பட்டவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் .
மேலும் கூடுதாழை யில் அவர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர். கடந்து பத்து நாட்களாகவே கூடுதாழை மீனவர்கள் தூண்டில் பாலம் அமைக்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.