கஜினி திரைப்படத்தை குறித்து நயந்தாரா சர்ச்சை பேச்சு… மறைமுகமாக பதிலடி கொடுத்த இயக்குநர்..!
நடிகை நயந்தாரா:
ஹரி இயக்கதில் உருவான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி வைத்தார் நயந்தாரா.
அவர் நடித்த முதல் படமே மிகப்பெரிய பெயரையும் புகழையும் கொடுத்த நிலையில், அடுத்தடுத்து ரஜினியுடன் சந்திரமுகி, விஜய்யுடன் சிவகாசி, சிம்புவுடன் வல்லவன் என முன்னனி நடிகர்களின் ஹிட் பட வாய்ப்புகள் தேடி வந்தன.
இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார் நயன்தாரா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா அளவில் கலக்கி வருகிறார் நயந்தாரா.
கஜினி:
கடந்த 2005 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் கஜினி. இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அசின் கதாநாயகியாக நடித்த இப்படத்தில் நயந்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
கஜினி ரீ ரிலிஸ்:
சமீபத்தில் இந்த படம் ரீ ரிலிஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் கஜினி படம் தொடர்பாக முன்னதாக நடிகை நயன்தாரா கொடுத்த ஒரு பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
நயந்தாரா பேட்டி:
அந்த பேட்டியில், ”என் வாழ்க்கையில் நான் எடுத்த மோசமான முடிவு கஜினி படத்தில் நடித்ததுதான். எனக்கு சொல்லப்பட்ட விதத்தில் என் கதாபாத்திரம் படத்தில் அமையவில்லை.
நான் சில இடங்களில் மோசமாக சித்தரிக்கப்பட்டேன். இருப்பினும் அதைப் பற்றி புகார் அளிக்க விரும்பவில்லை.
இதனை என்னுடைய வாழ்க்கையில் ஒரு அனுபவமாக கருதுகிறேன்” என்று கூறினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஏ.ஆர் முருகதாஸும் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.
ஏ.ஆர் முருகதாஸ்:
அதில், எனக்கு ஒருவரை பிடிக்கும் அல்லது பிடிக்காது என்பதற்காக அவரை படத்தில் மிகைப்படுத்தியோ அல்லது குறைவாகவோ காட்டமாட்டேன்.
சில சமயங்களில் நமக்கு பிடிக்காதவர்களுக்கு நல்ல கதாபாத்திரமும் பிடித்தவர்களுக்கு சிறிய கதாபாத்திரமும் அமையும். மேலும் இது நமது கைகயில் இல்லை என்று கூறியுள்ளார்.
தற்போது இந்த இரண்டு பேட்டிகளும் இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தில் மீண்டும் பேசுபொருள் ஆகி வருகின்றது.
-பவானி கார்த்திக்