நாதக சின்னம் அறிக்கை..! ரத்த கொதிப்பே ரத்த கொதிப்பே..!! கடுப்பில் சீமான்…!!!
நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை அறிவித்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதுக்குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு :
அப்போது பேசிய அவர், நம்முடைய விவசாய சின்னத்தை கர்நாடகவை சேர்ந்த வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கிவிட்டார்கள், இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் தேர்தல் ஆணையம் விவசாய சின்னத்தை தர மறுத்துவிட்டது.
தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை :
விவசாய சின்னத்திற்கு பதில் மைக் சின்னம் கொடுத்தார்கள்., ஆனால் அதை ஏற்க மனம் இல்லாததால் படகு, கப்பல், அல்லது தீபெட்டி சின்னம் கேட்டு மீண்டும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் அந்த கோரிக்கையையும் தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.
மைக் சின்னம் உறுதி :
தேர்தல் ஆணையத்திடம் நாதக சார்பில் பலமுறை கோரிக்கை வைத்தும் ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் கடைசியாக மைக் சின்னத்தை உறுதி செய்து நம்மிடம் கொடுத்து விட்டார்கள்.
கடுப்பான சீமான் :
இதை பற்றி சீமான் மும்மறமாக பேசி கொண்டிருந்த போது பின்னே இருந்த ஒருவரின் போனில் “ரத்த கொதிப்பே ரத்த கொதிப்பே என் மாமனாருக்கு ரத்த கொதிப்பே ” என ஒலித்ததால் சீமான் மட்டுமின்றி அவரை சுற்றி இருந்த கட்சி நிர்வாகிகளும் கடுப்பாக்கியுள்ளனர். அதன் பின் அந்த நபர் அங்கிருந்து வெளியேறினார்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..