“உங்கள் எஸ்பி-யிடம் பேசுங்கள்” என்ற புதிய திட்டத்தை நாகை புதிய எஸ்பி தொடங்கி வைத்துள்ளார்.
கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான புகார்களை இனி பொதுமக்கள் 24 மணி நேரமும் நாகை எஸ்பியை தொடர்புகொண்டு தெரிவிக்க அலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, 8428103090 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தொடர்புகொண்டு எஸ்பியிடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் கடத்தலுக்கு துணையாக இருக்கும் முக்கிய புள்ளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post