மிருதன் 2 வருது.. பணிகள் ஆரம்பம்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!
தமிழ் சினிமாவில் புதிய புதிய களங்களில் திரைப்படங்களை இயக்கி வருபவர் சக்தி சௌந்தரராஜன். இவர், நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, டெடி, டிக் டிக் டிக், மிருதன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இதுவரை இயக்கியுள்ளார்.
ஆனால், சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான கேப்டன் திரைப்படம் மட்டும், போதிய வரவேற்பை பெற முடியாமல், தோல்வி அடைந்தது. இதனால் கம்பேக் கொடுத்த நினைத்த சக்தி, தற்போது தனது ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தின் சீக்வலை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதாவது, ஜெயம் ரவி, லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் உருவான மிருதன் திரைப்படம், கடந்த 2016-ஆம் ஆண்டு உருவாகியிருந்தது. இப்படத்தை, ஷக்தி சௌந்தர ராஜன் தான் இயக்கியிருந்தார். இப்படம் பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடந்து வருகிறது.
தற்போது, அந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாம்.
ஏற்கனவே, 2 முறை வெற்றியை ருசித்த இந்த கூட்டணி, 3-வது முறையும் வெற்றி அடையுமா என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
-பவானி கார்த்திக்