ADVERTISEMENT
துப்புரவு பணியாளர்கள் பணியை புறக்கணித்து விட்டார்களா..??
மதுராந்தகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் பணியின் போது, கொடுக்கப்பட வேண்டிய பணப்பலன், தூய்மை பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிரந்தர நகராட்சி ஆணையர் இல்லாததால் கூற முடியவில்லை என 30-க்கும் மேற்பட்ட நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.