அமைச்சர் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் சொத்துக்குவிப்பு வழக்கு..!! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணை செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீது கடந்த 2012ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அதன் பின் கடந்த 2022ம் ஆண்டு தங்கம் தென்னரசு, மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவிக்க உத்தரவிட்டிருந்தது.
அவர்கள் இருவரையும் விடுவித்தற்கு எதிராக 2023ம் ஆண்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து அந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தார். அதன் பின் அந்த வழக்கிற்கான கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை நடைபெற்ற நிலையில், அமைச்சர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது..
அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இந்நிலையில், அமைச்சர்களுக்கு எதிரான இந்த வழக்குகளில் இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு வழங்கினார்..
அந்த சொத்துகுவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்மென்ற. குற்றச்சாட்டை பதிவு செய்து, சாட்சிகளை விசாரணையை துவங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
தினசரி விசாரணை நடத்த வேண்டும் எனவும் செப்டம்பர் 11ம் தேதிக்குள் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்..