மின்நிறுத்தம் செய்யக் கூடாதா…??
10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும் வரை மின்நிறுத்தம் செய்யக் கூடாது என அனைத்து மின்வாரிய பொறியாளர்களுக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் 12 ஆம் தேதி 12 ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கப்பட்டு 17 ஆம் தேதி வரை நடைபெற்றன.
இதையடுத்து, திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுவையில் தொடங்கியது.
இந்த தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 மாணவர்கள் எழுதியுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பொது தேர்வு தொடங்கி உள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ளது.
இந்நிலையில் பொது தேர்வு முடியும் வரை மின் நிறுத்தம் செய்யக்கூடாது என அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யக்கூடாது என்றும் எந்த காரணத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளின் படிப்பிற்கு இடையூறாக இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.