தமிழகம் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது எனவும் இந்த ஆண்டு 60 கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்படுள்ளதாகவும் அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்
சுற்றுலா தினத்தை முன்னிட்டு சென்னை தீவித்திடல் பகுதியில் வெளிமாநில சமூக வலைதள ஊடகவியலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலங்களுக்கு பேருந்து மூலம் சுற்றுலா அழைத்து செல்லும் நிகழ்வினை அமைச்சர் இராமசந்திரன் சென்னை தீவு திடலில் துவக்கி வைத்தார்..,
விழாவில் அமைச்சர் ராமசந்திரன் பேச்சு..,
அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலா துறையை மேம்படுத்த நவடிக்கை செய்யப்பட்டு வருகிறது. 2021 ல் தமிழ்நாட்டிற்கு -11.96 கோடி நபர்கள் சுற்றுலா வந்துள்ளனர். 2022 ல். 21.80 கோடி நபர்கள் சுற்றுலா வந்துள்ளனர் இந்தாண்டு இந்த எண்ணிக்கை 30 கோடியாகும் என எதிர்பார்க்கிறோம். கர்நாடகா , தெலுங்கானா, கேரளா, பூனா போன்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சமூக வலைதள ஊடகவியலாளர்கள் இதில் சுற்றுலா செல்கின்றனர் கொரோனாவிற்கு பின் வெளிநாட்டு பயணிகள் வருவது குறைந்தது. தற்போது சற்று உயர்ந்து கொண்டே வருகிறது..
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இராமசந்திரன்..,
தமிழ்நாட்டை கண்டு மகிழ்வோம் திட்டம் மூலம் பிற மாநில சமூக வலைதள ஊடகவியலாளர்கள் தமிழக சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா செல்ல அனுப்பி வைக்கப்படுகின்றனர். சுற்றுலா இடங்களில் உள்ள முக்கிய துவத்தை அவர்களது ஊடகத்தில் போட்டு பிரபல படுத்தும் நோக்கில் 10 நபர்கள் வாகனங்கள் மூலமாக அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளோம்.
எதிர்காலத்தில் சுற்றுலா வளர்ச்சி அடையும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்
இரண்டாவது இடத்தில் உள்ள தமிழக சுற்றுலா துறை முதல் இடத்திற்கு நிலைக்கு வரும் முயற்ச்சித்து வருகிறோம். கடந்த ஆண்டு 30 கோடி ரூபாம் லாபம் இத்துறை மூலம் ஈட்டி உள்ளோம். இந்த ஆண்டு மூலம் 60 கோடி ரூபாய் லாபம் வரும் என எதிர்பார்ப்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.