வாணியம்பாடி பள்ளி விபத்து தொடர்பாக வருத்தத்தை தெரிவித்து கொள்வதாக அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று பள்ளிக்கல்வி துறையில் இளநிலை உதவியாளர் பணியில் சேர உள்ள 673 நபர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பணி நியமன ஆணைகளை வழங்கினார்…
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,
என்னுடைய பள்ளிக்கல்வித்துறை சார்ந்த 673 இளநிலை உதவியாளர் பணியில் சேரும் நபர்களுக்கு பணி ஆணையை வழங்கி உள்ளேன். ஆங்காங்கே உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
இளநிலை உதவியாளர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இரவு நேரங்களில் பள்ளி கூடம் முடிந்து விட்டு செல்லும் போது அந்த துயர சம்பவம் நடந்துள்ளது… அதற்கு என் வருத்தங்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
மழை காலங்களில் பள்ளி வளாகங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தெரிவித்துள்ளோம். வாணியம்பாடி பள்ளி விபத்து தொடர்பாக எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். பள்ளி வளாகங்களில் விபத்து ஏற்படுத்தும் வகையில் இருப்பதை அகற்றவும், தொடர்ச்சியாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம்..
மாணவர்கள் மன அழுத்தம் குறித்த கேள்விக்கு,
பள்ளிகளில் கலை,பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்துவது வெறுமனே கொண்டடதிற்கு மட்டும் அல்ல மன அழுத்தத்தை போக்கவும் தான்..வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்வது கூட மாணவர்களுக்கு இது போன்று ஒரு அழகான உலகம் இருக்கிறது என்று சொல்லாமல் சொல்வதற்கு தான்…
பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம்…ஆசியர்களிடமும் நாங்கள் மாணவர்களை எதுவுமே சொல்ல கூடாதா? எங்கள் மாணவர்களை நாங்கள் நல்வழி படுத்த முடியாதா? என்கிற ஒரு கேள்வி இருக்க தான் செய்கிறது..
நாம் இதை சமணிலையுடன் தான் கொண்டு செல்ல வேண்டும்…
நான் படித்த காலத்தில் எல்லாம் ரெண்டு கண்ணையும் விட்டு விட்டு தோலை உரியுங்கள் என சொன்ன காலமெல்லாம் இருக்கிறது அது அக்கறையின் காரணமாக கூறியது…
ஆசிரியர் மாணவர்களுக்கான உறவே உரிமையுடன் திட்டுவார்கள்,அடிப்பார்கள் பிறகு அனைத்து கொள்வார்கள் இது போன்று அன்று இருந்தது…
ஆனால் இன்று நிலைமையே மாறி விட்டது…ஆசிரியர்கள் கொஞ்சம் கோவமாக திட்டினால் கூட அடுத்த கட்ட முடிவை உடனே எடுத்துக்கொள்கிறார்கள்…இது வருந்த தக்கதாக இருக்கிறது.
800 மருத்துவர்கள் மூலம் ஏற்கனவே கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது…இருந்தாலும் இது போன்ற முடிவுகள் எடுப்பது வருத்தமளிக்கிறது…
மிக விரைவில் ஆசிரியர்களுக்கு எமிஸ் பயன்பாடு குறைக்கப்பட உள்ளது…
ஆசிரியர்கள் பங்களிப்பு இல்லாமல் மாணவர்கள் உயர முடியாது…பெற்றோர்களும் ஆசிரியர்கள் எதாவது மாணவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள் என்றால் நமது பிள்ளைகளின் நல்லதுகாக தான் அவர்கள் சொல்கிறார்கள் என்று பெற்றோர்கள் நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்…
பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஒரு நல்ல மாணவனை நல்ல மாணவனாக இந்த சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்… என தெரிவித்தார்.