வினாடிக்கு 45.18 அடியாக குறைந்த மேட்டூர் அணை நீர்மட்டம்..
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
தற்போது போதிய அளவில் மழை பெய்யததால் மேட்டூர் அணைக்கு நேற்று 89 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 286 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர்தேவைக்காக விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரவைவிட நீர்திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று 45.47 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 45.18அடியாக குறைந்ததுள்ளது. மேலும் நீர் இருப்பு 14.91 டி.எம்.சி.யாக உள்ளது.
-பவானிகார்த்திக்