மே தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிவப்பு நிற சட்டை அணிந்து சிந்தாரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து மே தின வாழ்த்துரை ஆற்றினார்.
முதல்வருடன் அமைச்சர்கள் சேகர் பாபு, மா சுப்பிரமணியன், கணேசன், சிவ சங்கர் துணை மேயர் மகேஷ் குமார் மேயர் பிரியா, திமுக அமைப்பு செயலாளர் டி கே எஸ் இளங்கோவன், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் முதல்வருடன் மலர் அஞ்சலி செலுத்தினார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை வரவேற்பதற்காக ஏராளமான கட்சி தொண்டர்கள் கைகளில் திமுக கொடிகளை ஏந்தி முதல்வரை வரவேற்றனர்.