கேரளாவில் மனைவியுடன் இயற்கைக்கு மாறாக உறவு கொண்ட கணவனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மனைவியை இயற்கைக்கு மாறான பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கணவனுக்கு, ஓராண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மஞ்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மலப்புரம் மாவட்டம், நீலம்பூர் அருகே உள்ள அமரம்பலத்தைச் சேர்ந்த 36 வயது நபர், அவரது மனைவியை கடந்த 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை குடும்ப வன்முறைக்கு ஆளாக்கியதோடு, இயற்கைக்கு மாறாக பாலியல் உறவிலும் ஈடுபட்டும் வந்துள்ளார்.
மேலும் திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட 35 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டதோடு, அந்த பெண்ணை பெற்றோரிடம் பணம் வாங்கி வரும் படி கொடுமைப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் அவர் “அழகாக இல்லை” எனக்கூறி துன்புறுத்த ஆரம்பித்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிக்கையை இன்று நிலம்பூர் இன்ஸ்பெக்டர் அப்துல் பஷீர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 18 சாட்களிடம் விசாரணை நிறைவுற்ற நிலையில், மஞ்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, மனைவியை இயற்கைக்கு மாறான பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கணவனுக்கு, ஓராண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை நீட்டிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.