காதலர்கள் தற்கொலை..!! காரணம் குறித்து வெளி வந்த பகீர் தகவல்..!!
மேற்குவங்கம் மாநிலத்தில் சேர்ந்த நர்சிங் மாணவியும்.., அங்கு பணிபுரியும் இளைஞரும் லிவ்விங் ரிலேஷன் ஷிப்பில் வசித்து வந்துள்ள நிலையில் தற்போது இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தியத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
பெங்களூரு மாநிலத்தில் நர்சிங் சர்வீஸ் எஜென்சி ஒன்று செயல்பட்டு வருகிறது.., அதில் அபில் ஆபிரகாம் என்ற 29 வயது இளைஞரும்.., சவ்மினி தாஸ் என்ற 20 வயது பெண்ணும் ஒன்றாக வேலை செய்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. எனவே இந்த இளம் காதலர்கள், லிவ்விங் ரிலேஷன் ஷிப்பில் வசித்து வந்துள்ளனர்.
இருவரும் சந்தோஷமாக வசித்து வந்த நிலையில் நேற்று இரவு.., அவர்கள் வீட்டில் இருந்து துருநாற்றம் வீசியுள்ளது. எனவே சந்தேகித்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து பெங்களூரு கொத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பின் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.
இது குறித்து விசாரணை செய்ததில் அப்போது ஒரு கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
அந்த கடிதத்தில் சவ்மினி தாஸுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி.., கணவரின் சம்மதத்துடன் பெங்களூரு வந்து படித்துக்கொண்டு இருக்க, அந்த சமையம் அபில் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளைடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.., இதுப்பற்றி சவ்மினி தாஸின் கணவருக்கு தெரிந்துள்ளது. பலமுறை சவ்மினியின் கணவர் எச்சரித்தும்.., இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர்.
எனவே கள்ளக் காதாலனுடன் சேர கணவர் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் இருவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.