வனவிலங்குகளால் சேதமான நிலங்கள்..! ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..! பரபரப்பான அரியலூர்..!
அரியலூர் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றி மற்றும் வனவிலங்குகள் மூலம் பயிர்சேதம் ஏற்படாத வகையில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய நிலங்களில் காட்டுப்பன்றி மற்றும் வனவிலங்குகள் மூலம் பயிர்சேதம் ஏற்படாத வகையில் மத்திய மாநில அரசுகள் தடுத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயசங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாய நிலங்களில் நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை, மக்காச்சோளம், மரவள்ளிகிழங்கு, போன்ற பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை வாய் வழி மருந்து வைத்து விவசாயிகள் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
வன ஓரங்களில் வனவிலங்குகள் விவசாயபயிர்களை சேதப்படுத்தாத வகையில் உரிய தடுப்பு முறைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் வனவிலங்குகளால் பயிர்சேதம் ஏற்பட்டால் அதற்குரிய இழப்பீடு தொகையை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் மும்முனை மின்சாரம் 14 மணி நேரமும் தொடர்ச்சியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இலவச மின்மோட்டார் கேட்டு காத்திருக்கின்ற விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் 60 வயது முடிந்த அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
– லோகேஸ்வரி.வெ