குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா…!! விதிக்கப்பட்டுள்ள தடை..!!
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலய தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 12-ஆம் தேதி நள்ளிரவு நடைபெறுவதை முன்னிட்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் 9 காவல்துனை கண்காணிப்பாளர்கள் 30 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் சுமார் 250 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு பணி நடைபெற உள்ளது பக்தர்கள் வசதிக்காக குடிநீர் சுகாதாரம் 24 மணி நேரம் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
மிகவும் பிரசித்தி பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலய தசரா திருவிழா முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் வருகிற 12ஆம் தேதி நள்ளிரவு குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நடைபெறும்.. இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் தமிழக முழுவதும் இருந்து சுமார் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், குலசேகரபட்டினம் தசரா திருவிழாவிற்காக 9 காவல் துனை கண்காணிப்பாளர்கள் 30 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் மேலும் பெண்கள் குழந்தைகள் ஆகியோர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர் சூரசம்ஹாரம் நடைபெறும் பகுதி முழுவதும் சுமார் 250 க்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் நடமாடும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு நடைபெற உள்ளது மேலும் திருட்டு வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் காவல்துறை உடை இல்லாமல் சாதாரண உடையில் ஆண் பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்..
திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் எந்தவித ஜாதி அடையாளங்களை தெரிவிக்கும் வகையில் கொடிகளோ டீ-ஷர்ட் அணிந்து வரக்கூடாது அவ்வாறு அணிந்து வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதேபோன்று வேடமணியும் பக்தர்கள் காவல்துறை போன்று வேடம் அணியக்கூடாது என தடை செய்யப்பட்டுள்ளது மேலும் ஆயுதங்களை எடுத்து வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீறி வருபவர்களின் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார். மேலும் போக்குவரத்துக்காக மூன்று தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 30 தற்காலிக பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் ஒரே நேரத்தில் 17,000 வாகனங்கள் நிற்கும் அளவிற்கு வாகன பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது என்றார்..
போக்கு வரத்தைப் பொறுத்தவரையில் தூத்துக்குடியில் இருந்து குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயம் வரை ஒரு வழி பாதையாகவும் பின்னர் பக்தர்கள் தரிசனம் முடிந்த பின்பு மற்றொரு பாதை வழியாக செல்ல என மூன்று வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார் இதற்கான பணியில் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் விழாவை காண 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவதால் அவர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் முறையான குடிநீர் வசதி சுகாதார வசதி மற்றும் 24 மணி நேரம் செயல்படக்கூடிய மருத்துவ வசதி ஆம்புலன்ஸ் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..
வரும் பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்துவிட்டு செல்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்..