முன்னாள் காதலனை காரில் கடத்தி சென்று காதலி கொலை முயற்சி..!!
அரசு ஒப்பந்ததாரர் தூண்டுதலின் பேரில் முன்னாள் காதலனை காரில் கடத்தி கொலை செய்ய முயற்சி. கத்தி காயங்களுடன் மருத்துவமனையில் காதலன் அனுமதி.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கோட்டாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் மற்றும் ஆனைமங்கலம் பகுதியைச் சேர்ந்த சத்தியா ஆகிய இருவரும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இரு குடும்பங்களுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளித்து அதன் பேரில் சமரசமாக இருவரும் பிரிந்த நிலையில் ராஜேஷ் என்பவருக்கு திருமண ஏற்பாடு நடப்பதை அறிந்த சத்தியா தனது உறவினரான அரசு ஒப்பந்ததாரர் சங்கர் மாதவனிடம் கூறியதை அடுத்து அவர் தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட கும்பல் ராஜேஷை கொலை செய்யும் நோக்கில் காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
காரில் கடத்தி செல்லும்போது ராஜேஷ் ஓட்டுநரை தாக்கியதில் கார் நிலைத்தடுமாறி சாலையோர பள்ளத்தில் இறங்கியதை அடுத்து ராஜேஷ் காரில் இருந்து தப்பமுயன்று உள்ளார். கடத்திச் சென்றவர்கள் கத்தியால் அவரை குத்தி உள்ளார். ராஜேஷ் கூச்சலிடேவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்ததை பார்த்தவுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை அங்கேயே விட்டு விட்டு கடத்தியவர்கள் தப்பி ஓடி உள்ளனர். இருப்பினும் பொதுமக்கள் அதில் ஒருவரை பிடித்து செங்கம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் காயம் அடைந்த ராஜேஷை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.செங்கம்காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர். முழுக்க முழுக்க இதற்கு மூளையாய் நின்று செயல்படும் அரசு ஒப்பந்ததாரர் சங்கர் மாதவன் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ராஜேஷின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் காதலனை காரில் கடத்தி கொலை செய்ய காதலி முயற்சி செய்த இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது