கேரளா சென்றுள்ள ரஜினிகாந்தை அந்த மாநில அமைச்சர் முகமது ரியாஸ் சந்தித்து பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் -2 பாகத்தில் நடித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் முதல் இந்த படத்தின் படபிடிப்பு நடந்து வருகிறது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அட்டப்பாடி, சோலையூர் போன்ற பகுதிகளில் படபிடிப்பு நடந்தது. தறபோது, கோழிக்கோட்டில் படபிடிப்பு நடைபெற்று வருகிறது.
சுமார் 20 நாட்கள் நடக்கும் இந்த படபிடிப்பில் ரஜினிகாந்த் 6 நாட்கள் பங்கேற்கிறார். இந்த நிலையில், கோழிக்கோட்டில் தங்கியுள்ள ரஜினிகாந்தை கேரள மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் சோசில் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
ஜெயிலர் 2 படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷராப் ஆகியோரும் நடிக்கின்றனர். மலையாள நடிகர் சூர்ய வஞ்சரமூடு வில்லனாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும் சின்ன வேடத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
கடந்த 2023ம் ஆண்டு ஜெயிலர் படத்தின் முதல் பாகம் வெளியானது. 600 கோடியை இந்த படம் வசூலித்தது.