கார்கில் வெற்றி தினம் கொண்டாட்டம் பிரதமர் மோடி மரியாதை..! குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதிவு..!
கடந்த 1999ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்திய இராணுவ வீரர்கள் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி “கார்கில் வெற்றி தினம்” கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் டெல்லி, ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள போர் நினைவுச் சின்னங்களுக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி :
இன்று 25ம் ஆண்டு கார்கில் போரின் வெற்றி தினம் இந்தியா முழுவதும் வெள்ளி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. காஷ்மீரில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.
அதனை தொடர்ந்து இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ஷிங்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். 4.1 கி.மீ. நீளமுள்ள இரட்டைக் குழாய் சுரங்கப்பாதையாக ஷிங்குன் லா சுரங்கப்பாதை விரைவில் அமைக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திரவுபதி முர்மு பதிவு :
முன்னதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கார்கில் வெற்றி தினம் குறித்து எக்ஸ் சமூக வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “கார்கில் வெற்றி தினம் நமது ஆயுதப் படைகளின் அசாத்தியமான துணிச்சலுக்கும், அசாதாரண வீரத்துக்கும் நன்றியுள்ள தேசம் மரியாதை செலுத்தும் ஒரு சந்தர்ப்பமாகும்.
1999ஆம் ஆண்டு கார்கில் சிகரத்தில் பாரதமாதாவை பாதுகாக்கும் போது மிக உயர்ந்த தியாகம் செய்த ஒவ்வொரு இராணுவ வீரர்களும் நான் தலைவணங்குவதுடன் அவர்களின் புனித நினைவுகளுக்கு தலைவணங்குகிறேன். அவரது தியாகம் மற்றும் வீரத்தால் அனைத்து நாட்டு மக்களும் ஈர்க்கப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்.ஜெய் ஹிந்த்..! இந்தியாவுக்கு வெற்றி..!” என பதிவிட்டுள்ளார்.