காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் குடிபோதையில் பணம் கேட்டு மிரட்டி தகராறு,வேன் டிரைவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் பாவா பேட்டை தெருவை சேர்ந்தவர் அயூப் கான் வயது 50, வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் அயுப்கான் நேற்று நள்ளிரவு சவாரிக்கு சென்று திரும்பிய நிலையில், ரங்கசாமி குளம் பகுதியில் உள்ள வேன் நிறுத்துமிடத்தில் வேனை நிறுத்திவிட்டு மது அருந்திக்கொண்டு இருந்துள்ளார்.
இந்நிலையில் அவ்வழியே மது போதையில் வந்த இரு இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்த அயுப்கானிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
இதில் அயுப்கானுக்கும் இரு இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் இரு இளைஞர்களும் சேர்ந்து அயுப்கானை காலால் எட்டி உதைத்து விட்டு தலையில் கல்லால் அடித்து விட்டு சென்றுள்ளனர்.
தலையில் கல்லால் அடித்ததால் படுகாயம் அடைந்த அயூப் கான் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
அதிகாலையில் நேரத்தில் அவ்வழியே சென்றவர்கள் அளித்த தகவலின் பெயரில் விஷ்ணு காஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த அயுப்கான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த சேக்குப்பேட்டையை சேர்ந்த பிரதீப் குமார் வயது 20, பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் வயது 23, ஆகிய இரு கூலித் தொழிலாளிகளை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post