பழனி செல்லும் பக்கதர்களுக்கு இனி ஹாப்பி தான்..!!
பழனி முருகன் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின் இழுவை இரயில் பாதையில் பராமரிப்பு பணி நடைபெற்றது, இதனால் ஒரு மாதம் முழுவதும் பக்தர்கள் இந்த ரயில் வழி சேவையை பயன்படுத்த அனுமதி அளிக்காமல் இருந்தனர்.
இனி பழனி செல்லும் பக்தர்களுக்கு ஒரு குட் நியுஸ், மின் இழுவை ரயில் நிலையத்தில் புதிய பெட்டி பொருத்தும் பணிகள் முடிவடைந்தது, அதனால் இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
ஏற்கனவே, ஒரே நேரத்தில் 30 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில், மின் இழுவை ரயிலில் பெட்டிகள் இயக்கப்பட்டு வந்தது, தற்போது 75 பேர் அமர்ந்து செல்லும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டி பொருத்தப்பட்டுள்ளது.
இது வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏதுவாக இருக்கும். இந்த புதிய மாற்றத்தால் பக்தர்களுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. ஒரு சில பயணிகள் ரோப் காரில் செல்லுவார்கள், ஆனால் அது வயதானவர்களுக்கு ஏற்றது அல்ல.., இந்த புதிய ரயில் சேவை அனைத்து பக்தர்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.