ஆர்த்திக்கும் ரவிக்கும் இடையில் வரும் குஷ்பூ.. உண்மையா..?
நடிகர் ஜெயம் ரவி அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மனைவியான ஆர்த்தியை பிரிவதாக சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஜெயம் ரவி அவர்கள் நீதிமன்றத்திலும் விவாகரத்திற்கு அப்ளை செய்து உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர் அந்தணன் சில விஷயங்களை பேசியுள்ளார்.
ஆனால் இந்த செய்தியை குறித்து அவரது மனைவி ஆர்த்தி எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில் தற்போது ஆர்த்தி அவர்கள் வெளியிட்ட விளக்கத்தை வைத்து ஜெயம் ரவி ரசிகர்கள் சமூக தளங்களில் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
ஆர்த்தி அவர்களின் விளக்கத்தில், சில காலமாக சமூக தளங்களில் எங்களை பற்றியும் எங்களுடைய திருமண வாழ்வை பற்றியும் வரும் செய்திகளை கண்டு மன வேதனை அடைவதாகவும். இது அனைத்தும் என் பார்வைக்கு எட்டாமலும் என் ஒப்புதல் பெறாமலும் வந்த செய்தி எனவும், இதனால் 18 வருடங்களாக நான் வாழ்ந்த என் குடும்ப வாழ்க்கையின் கௌரவம் இழந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீப காலமாக என் கணவரை பார்த்து மனம் விட்டு பேச நான் எவ்வளவோ முயற்சித்தும் எனக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. நான் என் இரு குழந்தைகளும் எதுவும் அறியாமல் திகத்துப்போய் நிற்க்கின்றோம். திருமண வாழ்க்கையில் இருந்து விலக வேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட முடிவே ஆகும்.
ஆனால் நான் இதை பற்றிய எங்களின் கருத்துகளை சமூக தளங்களில் தெரிவிக்க விரும்பாத நிலையில் தான் இருந்தேன் ஆனால் இப்போது என் நடத்தையை பற்றிய தவறான தாக்குதல்களை நான் எதிர்கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.
பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியதாவது இப்போது ஜெயம் ரவி அவர்கள் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை, அவரை நம்பி பணம் போட்டிருக்கும் தயாரிப்பாளர்களும் இதே கவலையில் இருக்கிறார்கள்.
ஜெயம் ரவி எடுத்த முடிவினை பற்றி பேச ஆர்த்தி அவர்கள் ஜெயம் ரவி வீட்டிற்கு சென்று அவரை கேட்டிருக்கிறார் அதற்கு ஜெயம் ரவியின் வீட்டார்கள் அவர் வீட்டில் இல்லை என்றும் அவர் எங்கிருக்கிறார் என்று எங்களுக்கு தெரியாது மேலும் சமீபகாலமாக அவர் எங்கிருக்கிறார் என்று எங்களிடம் சொல்வதில்லை என கூறியிருக்கிறார்கள்.
மேலும் இந்த விஷயத்தில் நடிகை குஷ்பூ அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் ஆர்த்தி குடும்பத்தினரை குஷ்பூவிற்கு ஏற்க்கனவே தெரியும். ஒரு முறை குஷ்பூ வெளிநாட்டிற்கு சென்றபோது தான் ஆர்த்தியும் ரவியும் முதல் முறையாக சந்தித்து இருக்கிறார்கள். பின் ஆர்த்தி அவர்கள் தனது காதலை ரவிக்கு தெரியப்படுத்தியதுடன் ரவி அவர்கள் சிறிது காலத்திற்கு பிறகே ஒப்புகொண்டுள்ளார். ஆர்த்தி மற்றும் ரவி திருமணத்திற்கு குஷ்பூ அவர்களே காரணமாக இருந்திருக்கிறார். எனவே குஷ்பூ இவர்களின் இடையில் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.