திருப்பூரில் டிசம்பர் 12 ம் தேதி மனித சங்கிலி நடக்கப்போவதாக அறிவிப்பு…
திருப்பூரில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக டிசம்பர் 12 ம் தேதி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் சார்பில், மின் நிலைக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கை வலியுறுத்தி 8ம் கட்ட போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 170 சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 12 ம் தேதி தொழிலாளர்கள் உடன் இணைந்து தமிழகம் முழுவதும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மாபெரும் மனித சங்கிலி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.