ஆளில்லா விமான சோதனை மையம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு சோதனை திட்டத்தின் கீழ் முதல் ட்ரோன் சோதனை மையம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் வடகாலில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் அமைக்கப்படவுள்ளது.4 நிறுவனங்கள் டிட்கோவுடன் இணைந்து 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சோதனை மையத்தை அமைக்க உள்ளன. இதன் மூலம் ட்ரோன் ஆராய்ச்சி, வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் சோதனைகளுக்குத் தேவையான பல்வேறு வசதிகள் ஒரே இடத்தில் வழங்கப்பட உள்ளன.
ட்ரோன் உற்பத்தியில் தமிழ்நாடு சர்வதேச மையமாக திகழவும், பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சார்புத் தேவையை பூர்த்தி செய்யவும் ட்ரோன் சோதனை மையம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.