ரத்னம் படத்தின் கதை இது தானா..? ரசிகர்கள் சொன்ன கருத்து..?
இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியாகி திரையில் ஓடி கொண்டிருக்கும் ரத்னம் திரைப்படத்தின் கதை மற்றும் ரசிகர்கள் சொன்ன கருத்து இதை பற்றி இதில் பார்க்கலாம்.
நடிகர்கள் :
இயக்குனர் ஹரி தயாரிப்பில் வெளிவரும் படங்கள் என்றாலே அவை சூப்பர் ஹிட் என சொல்லலாம்.., உதாரணத்திற்கு கோவில், சாமி, ஐயா, சிங்கம், பூஜை போன்ற படங்கள்.. இப்படி பல ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் ஹரி.. தற்போது வெளியிட்டுள்ள படம் தான் “ரத்னம்“
நடிகர் விஷால், பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ராஜேந்திரன் உட்பட பலரும் இதில் நடித்துள்ளனர்.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இயக்குனர் ஹரி, சந்தானம் மற்றும் அலங்கர் பாண்டியன் ஆகியோர் தயாரிப்பில் வெளியான இந்த படத்தின் கதை என்ன இந்த படத்திற்கு ஏன் ரத்னம் என பெயரிடப்பட்டது என பார்க்கலாம்..
தமிழ்நாடு ஆந்திரா எல்லை பகுதியில் வசித்து கொண்டிருப்பவர் தான் நம்ப ஹீரோயின் பவானி சங்கர் இந்த படத்தில் இவரின் பெயர் ( ஜனனி ).., ஜனனியை பார்த்ததும் காதலிக்க தொடங்கும் விஷால் (ரத்னம்) தான் காதலித்த பெண் மிகப்பெரிய சர்ச்சையில் உள்ளதை உணர்கிறார்.
இதனால் ஆந்திராவில் பல எதிர்ப்புகளை எதிர்கொள்கிறார்.., “ஒரு காதலால் தமிழ்நாடு ஆந்திராவிற்கு இடையே ஏற்படும் சண்டையே” படத்தின் முழுக்கதை..
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில்.., ஹரிஹரன் வாய்ஸில்.., விவேக எழுதிய பாடல் தான் “எது வரையோ எது வரையோ இந்த வாழ்க்கை” என்ற பாடல்..
தேவி ஸ்ரீ பிரசாதே இசை அமைத்தே அவரே பாடிய பாடல் தான் “டோன்ட் வொரி டா மச்சி (Dont Worry da Machi )” இந்த பாடலையும் விவேகா தான் எழுதியுள்ளார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், கபில் கபிலன் மற்றும் ரைனா ரெட்டி வாய்ஸில் விவேக எழுதிய பாடல் “உயிரே என் உயிரே நீ தானா”
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், விவேகா வரிகளில், செண்பகராஜ் பாடிய பாடல் தான் “வாராய் ரத்னம்” என்ற பாடல்..
ஹரி இயக்கும் படம் என்றாலே அது ஹிட் படம் தான்.., ஆனால் இந்த படம் விஷால் நடித்ததால் சொல்லும் அளவிற்கு இல்லை.., யோகி பாபு காமெடி மற்றும் பவானி சங்கர் பிடித்தவர்களுக்கு இந்த படம் பார்க்க பிடித்திருக்கும்..
இத்தனை நாள் அனிருத் இசையில்.., புரியாத வரியில் கேட்ட பாடல்களுக்கு மத்தியில் விவேகாவின் வரியில் ஹரிஹரன் வாய்ஸில் பாடல்கள் வெளியானது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது..
–லோகேஸ்வரி
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..