பெங்களூர் குண்டுவெடிப்புக்கு இவரது காரணமா..? சிக்கிய அந்த குற்றவாளி யார்..?
பெங்களூரு நகரின் ராஜாஜி நகர் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபலமான உணவகத்தில் கடந்த மார்ச் 3ம் குண்டுவெடித்தது. இதில் கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 9 பேர் காயமடைந்தனர். குண்டுவெடித்த வழக்கில் சந்தேகப்படும் நபர் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறையினர் இது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதி தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகித்த காவல்துறையினார் 8 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் குண்டுவெடிப்பிற்கு காரணமான முக்கிய குற்றவாளி சிக்கியுள்ளார். பெல்லாரியில் வைத்து சபீர் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.