இந்தியன் 2 படத்திற்கு தடை வழக்கு..! கமலஹாசனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..?
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் மிக பிரமாண்டமான பட்ஜெட்டில், லைகா புரொடெக்ஷன் தயாரிப்பில் வெளியாகி வருகின்ற ஜூலை 12ம் தேதி உலகெங்கும் படம் திரையரங்கில் வெளியாக இருந்த நிலையில் மதுரை ஹெச்.எம்.எஸ் காலனியில் உள்ள வர்மக்கலை, தற்காப்புக்கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து ராஜேந்திரன் கூறியதாவது, இந்தியன் படத்தின் முதலாவது பாகத்தில் தனது பெயர், மட்டுமின்றி வர்மக்கலை குறித்தும் ஆலோசித்திருந்தார். ஆனால் இந்தியன் 2 படத்தில் வர்மக்கலை குறித்த ஆலோசனை எதுவும் செய்யவில்லை, எனவே இந்த படத்தை திரையரங்குகளில் மட்டுமின்றி ஓடிடி தளத்திலும் வெளியிட தடைவிதிக்க கோரி மனு அளித்துள்ளார்.
இந்த மனுவானது மதுரை நீதிமன்ற நீதிபதி செல்வமகேஸ்வரி முன் விசாரணைக்கு வந்தது.., அப்போது நடிகர் கமல்ஹாசன் தலைமையில் தலைமையில் வழக்கறிஞர் சுபாஷ்கரன் ஆஜராகினார். அப்போது வாதாடிய அவர், “வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் 1993 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளில் எழுதியுள்ள 2 வர்மக்கலை புத்தகத்தில் வர்மக்கலை குறித்தும், முத்திரை குறித்தும் நுணுக்கமாக கூறப்பட்டுள்ளது.
புத்தக தகவல்களை மையமாக வைத்து ஆலோசனை செய்து இந்தியன் முதலாவது பாகம் எடுக்கப்பட்டது. ஆனால், இந்தியன் 2 படத்தில் எங்களை ஆலோசிக்காமல் வர்மக்கலை முத்திரைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. புத்தகங்களை தழுவியே இந்தியன் படம் உருவாக்கப்பட்டது.
ஆனால் இந்தியன் 2 பட டைட்டில் கார்டில் வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் பெயரை பதிவு செய்ய வேண்டும் என கேட்டிருந்தோம்” ஆனால் இடம் பெறவில்லை என ராஜேந்திரன் தரப்பு வழக்கறிஞர் பிரபு நீதிமன்றத்தில் வாதாடினார்.
“இந்தியன் 1” படத்தில் வர்மக்கலை தகவல் என ராஜேந்திரன் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கு ஒரு தவறான வழக்கு. ஜுலை 11ம் தேதி இயக்குநர் ஷங்கர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்படும் என சுபாஷ்கரன் தெரிவித்தார்.
வர்மக்கலை என்பது உலக அளவில் உள்ள ஒரு கலையாகும், அகஸ்தியர்கள் கண்டுபிடித்த இந்த வர்மக்கலை. இந்தியன் 2 படத்தில் வர்மக்கலை ஆசான் பிரகாசம் குருக்கள் என்பவரை வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியன் படத்திற்கும், வர்மக்கலை ஆசான் ராஜேந்திரனுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை” என இயக்குநர் ஷங்கர் தரப்பு வழக்கறிஞர் சாய் குமரன் நீதிமன்றத்தில் வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி மகேஸ்வரி, படப்பிடிப்பு குழு சார்பில் மனுதாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்து, கமலஹாசன் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
– லோகேஸ்வரி.வெ