“அதிகரித்த போதைபொருள் புழக்கம்..” பெயர் கெட்டுபோகும் புனித திருத்தலத்தின் பெயர்..!!
ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் கஞ்சா கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத போதை வஸ்துக்கள் பழக்கம் அதிகரித்து வருவதாக வந்த புகாரை அடுத்து கிராமிய காவல் நிலைய போலீசார் ஆய்வாளர் விஜயபாஸ்கர் தலைமையில் தீவிர சோதனை மேற்கொண்டதோடு இங்குள்ள சாதுக்கள் யாரேனும் குற்றப் பின்னணி கொண்டவர்களா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக செயல்படுத்தப்படும் மத்திய மாநில அரசு நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்டம் முழுதும் மக்கள் கூடும் இடங்களில் 20 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
முனீஸ்வரன் கோவில் மகாகும்பாபிஷேகம் :
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி ஆமூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு குஜடா முனீஸ்வரர் ஆலயத்தின் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதிமுக ஆமூர் கிளைச் செயலாளர் ஏ.இசேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஜடாமுனி ஈஸ்வரரை வழிபட்டார்.