சென்னை நீலாங்கரையில் உள்ள ஜிஸ்கொயர் நிறுவனத்தின் இயக்குநர் பாலாவின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகிறார்கள்.
அது போல் அந்த நிறுவனத்தின் ஆடிட்டரின் அண்ணாநகர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் “2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஜிஸ்கொயர் நிறுவனம் நஷ்டத்தில் வருவதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. 2020 இல் ரூ 7 கோடியும் 2021 இல் ரூ 8 கோடியும் நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது கடந்த 2 ஆண்டுகளில் திடீர் முதலீடுகளுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது? பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டியது எப்படி, இந்த நிறுவனத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருக்கிறதா, வாடிக்கையாளர்களிடம் பெறும் பணத்திற்கு உரிய வரி செலுத்தப்படுகிறதா” என்றும் பாலாவிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் கேள்விகளை எழுப்பியதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ஜிஸ்கொயர் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு, வரவு செலவு கணக்கு, முதலீடு ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.