சாலைவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி பகுதியில் சாலைவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி அப்பகுதி மக்கள் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த பத்து ஆண்டுகளாக தங்கள் பகுதியை எந்த அரசியல் வாதிகளும் கண்டு கொள்ள வில்லை என்றும், அடிப்படை வசதியும் செய்து தர வேண்டி, பல முறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.